Friday, March 20, 2015

சிகரெட்

முத்தமிட்டு என்னை கரைய வை
யுத்தமின்றி உன்னை மறைய வைக்கிறேன்
இப்படிக்கு சிகரெட்

Saturday, December 20, 2014

வெளிநாட்டில் இந்தியன்


பணம் சம்பாதிக்க நாட்டை விட்டேன்
மன நிம்மதியை கோட்டை விட்டேன்

Saturday, November 8, 2014

விஷ்வ குமார்




உலக நாயகனுடன் பிறந்த நாள் காணும் எங்கள் 
உலோக நாயகனே 

சமன்பாடு என்றாலே மதிப்பெண்கள் வாங்க அவை 
இடர்பாடு 

அதை மனப்பாடம் செய்யும் மாணவர்களுக்கு 
பெரும்பாடு 

உங்களால் தானே எங்களுக்கு அறிவியலில் வந்தது 
 ஈடுபாடு 

பாடம் பயில பல மாணவர்கள் வந்தடைந்தனர் கீரைக்கடை சந்தை 
அங்கே நீ விதைத்தாய் எங்களுக்குள் பற்பல அறிவியல் சிந்தை 

தனிங்மகள் பற்றி மட்டுமா நடத்துகிறாய் 
தனிமனித ஒழுக்கதுக்கே ஒரு சான்றாக நடந்தல்லவா காட்டுகிறாய் 

நாடி வந்த பலரை பலர்
நாடி பிடித்துப்  பார்க்கச்  செய்துவிட்டாய் 

தேதிகளுடன் சம்பவங்களை நினைவு வைத்திருக்கும் 
வேதியல் ஐயா 

தகரம் வெள்ளி பற்றி படித்தாய் 
தங்கப் பதக்கம் பெற்று 
சிகரம் பிடித்தாய் 

ஒப்புமை கொடுத்து பாடங்களை புரிய வைக்குமுனக்கு 
ஒப்பு வேறு எவரும் இல்லை 

உஷாவை மணந்தாலும் எங்கள் வாழ்வில் நீ 
விடிவெள்ளி 

பான்ட் பைக்குள் கை விட்டபடி  
வரம் தரும் தெய்வம் 
பெத்தி செமினேரில் மட்டும்  தான் 
காண முடியும் 

நீ பூத்த புன்னைகையில் 
புதுவையில் பூத்தன பல 
பொன்னகைகள் 


அடி ஏன் தந்தாய் 
அடியேன் வாழ்வில் உயர 

அடுத்த பிறப்பிலும் இச்சிறியனுக்கு 
நீயே ஆசிரியனாக வேண்டும் 

சரண்யாவின் தந்தையே வாழ்த்த வயதில்லை உன் பொற்பாதங்களுக்கு 
சரணங்களே 




Saturday, December 28, 2013

தமிழும் தமிழரும்

ஒவ்வொரு தமிழனும் பிறரிடம் சொல்லி பெருமை  பட வேண்டிய ஒரு விந்தை தமிழில் உண்டு

தமிழ் என்ற சொல்லை உச்சரிக்கும் போது
"நா"(Tongue) மட்டுமே  மடிகிறது (Fold/Death) ஆனால் 
நான் வாழ்கிறேன் (Live)

தமிழ் என்ற சொல்லை உச்சரிப்பவர்கள் நாவை மட்டுமே மடிய வைத்து தமிழ் பேசியவர்களை வாழ வைக்கிறது தமிழ் மொழி 

Wednesday, December 18, 2013

காதலிக்கும் பெண்



காதலிக்கற பொண்ணும்
கடலும் ஒண்ணு

"அலை"ய  விடுறாளே

Friday, October 18, 2013

காதல் கவிதைகள்

உவமை  கொண்டு
புலமை கொண்டு
வந்ததல்ல என் காதல் கவிதைகள்

உன் பெண்மை கண்டு
உன் கண் மை கண்டு தடுமாறிய
என் உண்மை உணர்வுகள்
என் பேனா மையினால் பெருக்கெடுத்து
என் காதல்
உன் தாள் சேரும் முன்
என் ஏட்டு  தாளில் பதிந்த
அந்த புனித சொற்களே
என் காதல் கவிதைகள்


கணிப் பொறியாளனைப் பார்த்து ஞாயிறு

தேதித் தாளை கிழிக்கும் கணிப் பொறியாளனைப் பார்த்து
சொன்னது ஞாயிறு
நீ இன்று கிழித்தது ஞாயிறு
நாளையிலிருந்து கிழியப்போவது உன் ட்ராயிரு