Friday, October 18, 2013

காதல் கவிதைகள்

உவமை  கொண்டு
புலமை கொண்டு
வந்ததல்ல என் காதல் கவிதைகள்

உன் பெண்மை கண்டு
உன் கண் மை கண்டு தடுமாறிய
என் உண்மை உணர்வுகள்
என் பேனா மையினால் பெருக்கெடுத்து
என் காதல்
உன் தாள் சேரும் முன்
என் ஏட்டு  தாளில் பதிந்த
அந்த புனித சொற்களே
என் காதல் கவிதைகள்


கணிப் பொறியாளனைப் பார்த்து ஞாயிறு

தேதித் தாளை கிழிக்கும் கணிப் பொறியாளனைப் பார்த்து
சொன்னது ஞாயிறு
நீ இன்று கிழித்தது ஞாயிறு
நாளையிலிருந்து கிழியப்போவது உன் ட்ராயிரு 

காதலியைப் பார்த்து காதலன்



இரட்டைக் கால் மலரே
நீ கொண்டது வெறும் இரு இதழ்கள்
இருந்தும் என் கண்ணுக்கோ
நீ ஒரு  பூங்காவனம்


கடலலை



காதலின் இனிமையை உணர்ந்த கடல்
காதலர் காலடி சுவடுகளைத்   தொட்டு வணங்கிட
அலை கரங்களுடன்  ஓடி வருகிறதா  கரையை நோக்கி ?